Tamil christian song ,video songs ,message ,and more

செவ்வாய், 21 ஜூலை, 2015

லேசான காரியம் உமக்கு அது - Lesana Kariyam

லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம் [ 2 ]



பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

1. மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் [2 ]
மண்ணான மனுவுக்கு மன்னாவை அழிப்பது லேசான காரியம் [2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

2. உயிர் அற்ற சடலத்தை உயிர் பெற செய்வது லேசான காரியம் [ 2 ]
தீராத நோய்களை வார்த்தையால் தீர்ப்பதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்

3. இடறிய மீனவனை சீசனாய் மாற்றுவது லேசான காரியம் [ 2 ]
இடையனை கோமகனாய் அரியனை ஏற்றுவதும் லேசான காரியம் [ 2 ]
உமக்கு அது லேசான காரியம்
பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்
பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்
யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வது
லேசான காரியம் உமக்கு அது லேசான காரியம்
இயேசுவுக்கு லேசான காரியம்
என் இயேசுவுக்கு லேசான காரியம் [2]

வியாழன், 4 ஜூன், 2015

பாசமாய் இருப்போமே!


ஸ்காட்லாந்தைச் சேர்ந்தவர் ஏமி கார் மைக்கேல் அம்மையார். இவர் தென்னிந்தியாவிற்கு வந்து கிறிஸ்தவ ஊழியம் செய்து மரித்தார்.
கடைசி நாட்களில் ஜனங்கள் சுகபோக பிரியராக இருப்பார்கள். விசுவாசிகளாகிய நாம் இப்படிப் பட்டவர்களை விட்டு விலகி ஜீவிக்க வேண்டும்.நரக பாதாளத்தை நோக்கி விரைந்து கொண்டிருக்கும் போது, நீயோ சுகபோகமாய் வாழ விரும்புகிறாயே!'' என்று கேட்க, அம்மையார் தன் இருதயம் முழுவதையும் ஆண்டவருக்கு அர்ப்பணித்தார்கள்.
இந்த தரிசனம் மூலம் உணர்வடைந்த அம்மையார் தென்தமிழகம் வந்து ஆண்டவருக்குத் தொண்டாற்றினார்கள். மற்றவர்களின் கஷ்டம் பற்றி மக்கள் சிந்திப்பதில்லை. அவர்கள் தங்கள் சுகத்தைப் பற்றி மட்டுமே கவலைப்படுகிறார்கள். இந்த நிலையை பைபிள் வசனங்கள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இதோ! அந்த வசனங்கள்.
ஒருசமயம் அவருக்கு ஒரு தரிசனம் கிடைத்தது.

சுற்றுலாக்குழு ஒன்றுடன் சேர்ந்து, அவர் ஒரு பூங்காவில் குதூகலமாக கிறிஸ்தவப் பாடல்களைப் பாடிக் கொண்டும், பொட்டலங்களைப் பிரித்து ஒருவருக்கொருவர் உணவுப் பொருட்களைப் பரிமாறிக் கொண்டும் இருந்தார். அந்தக்குழுவினர் தங்கியிருந்த இடத்திலிருந்து, சற்று தொலைவில் ஒரு குன்று இருந்தது.

அந்த குன்றின் மேல், பார்வையற்ற பலர் வரிசையாக ஏறிக்கொண்டிருந்தனர். அவ்வாறு ஏறியவர்களில் முதல் நபர், ஒரு செங்குத்தான பாறையில் கால் வைக்க தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். அவரைத் தொடர்ந்து வந்தவர்களும், இவ்வாறே ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்து மடிந்து கொண்டிருந்தனர்.

தன் கண் முன்பாக நடந்து கொண்டிருந்த இந்தக் கோரக் காட்சியைக் கண்ட அம்மையார் அதிர்ந்தார். ஆனால், அதிக இடைவெளி இருந்ததால், அவரால் அங்குள்ள ஆபத்து பற்றி சொல்லி அந்த பார்வையற்றவர்களைத் தடுக்க முடியவில்லை. அம்மையாருடன் வந்த சுற்றுலாக்குழுவினரோ, இதுபற்றி கவலைப்படாமல், தங்களுக்குள் பேசிக் கொண்டு பொழுது போக்கிக் கொண்டிருந்தனர். அப்போது, இயேசுகிறிஸ்து, ஏமி கார்மைக்கேல் அம்மையாரை நோக்கி, ""எண்ணற்றவர்கள்

* கடைசி நாட்களில் ஜனங்கள் சுகபோக பிரியராக இருப்பார்கள். விசுவாசிகளாகிய நாம் இப்படிப் பட்டவர்களை விட்டு விலகி ஜீவிக்க வேண்டும். (2 தீமோ 3: 4)

* சுகபோகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்''(1 தீமோ5:4).
* ""மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும். (நீதி1:32)
* சீயோனிலே நிர்விசாரமாயிருக்கிறவர்களுக்கு ஐயோ,''. (அமோ.6:1)
சுயநலம், சுகபோகம், நிர்விசாரம், பெருமை, ஆடம்பரம் போன்றவற்றை தேவன் எதிர்த்து நிற்கிறார். சுயநல வெறி மனிதர்களுக்கு இருக்கக் கூடாது. மற்ற ஜனங்களின் நிலையைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இயன்ற உதவியைச் செய்து, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். வறுமையில் துவண்டு போனவர்களுக்கும், பணமிருந்தும் நிம்மதியற்றவர்களுக்கும் இயேசுவைப் பற்றி எடுத்துரைத்து நேசக்கரம் நீட்ட வேண்டும்.

சனி, 9 மே, 2015

தமிழ் பைபிள் மொபைல் (கைபேசி ) Android Iphone ipad



ஒரு காலத்தில் பைபிளை தலைமேல் வைத்து சர்ச்சுக்கு போவர்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு  முதலில் கல்வெட்டில் எழுதப்பட்ட பைபிள் பின்னர் ஓடுகள் , தோல்சுருள், பேப்பர் போன்ற பரிமாணங்கள் அடைந்து கணினி பைபில்லாக உருமாற்றம் அடைந்திருந்தது. இப்பொழுது பைபிள் செல்பேசியில் வந்துள்ளது அதுவும் தமிழில் வந்துள்ளது வரவேற்க்கத்தக்கது இது ஒரு இலவச மென்பொருள். 
    
பைபிள் மூலம்  கடவுள் தன்னை மனுகுலதிற்கு வெளிபடுத்துகிறார். பைபிளை நமது செல்பேசியில் மாத்திரம் அல்ல நமது இருதயத்திலும் சிந்தையிலும் பரிமாற்றம் செய்வதே சிறந்தது என்பது எனது தாழ்மையான கருது.
தரவிறக்கம் செய்வதற்கு முன்பாக  இணையதளத்தில் உங்களை பதிவு செய்யவேண்டும். 
  DOWNLOAD
செல்பேசி பைபிள் மென்பொருளை தரவிறக இங்கே கிளிக் செய்யவும்.

வியாழன், 30 ஏப்ரல், 2015

ஜீசஸ் திரைப்படம் (the story of jesus )

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாறு ஒலி வடிவில் கண்டு மகிழுங்கள்












ஜீசஸ் திரைப்படம் 1300க்கும் மேற்பட்ட மொழிகளில் Jesus Movie in 1300 languvage - jesus movie in tamil Language

திங்கள், 20 ஏப்ரல், 2015

ஆண்டவரின் அன்பை பெறுவோம்!


* கடவுள் இல்லை என்று ஒரு கூட்டம் வாதிடுகிறது. "கடவுளை மிஞ்சி சாதிப்பேன்' என்றும் அது சவால் விடுகிறது. ஆனால், பைபிள் இதுபற்றி என்ன சொல்கிறது. கேட்டு பார்ப்போமே!
* மனுப்புத்திரனே! ஒரு தேசம் எனக்கு விரோதமாய் துரோகம் பண்ணிக் கொண்டேயிருந்து, பாவம் செய்தால், நான் அதற்கு விரோதமாக என் கையை நீட்டி, அதில் அப்பம் என்னும் ஆதரவுகோலை முறித்து, அதில் பஞ்சத்தை அனுப்பி, மனுஷரையும் மிருகங்களையும் அதில் இராதபடிக்கு நாசம் பண்ணுவேன்.

* சகல மனுஷரே! கேளுங்கள். நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோடு இருப்பார். நீங்கள் அவரைத் தேடினால் உங்களுக்கு வெளிப்படுவார். அவரை விட்டுவிட்டீர்களேயாகில், அவர் <உங்களை விட்டுவிடுவார்
* நீ என்னை விட்டு பின் வாங்கிப் போனாய். ஆகையால், என் கையை உனக்கு விரோதமாய் நீட்டி, உன்னை அழிப்பேன். நான் பொறுத்து பொறுத்து இளைத்து போனேன்.


* மனுஷன் மேல் நம்பிக்கை வைத்து, மாம்சமானதைத் தன் புயபலமாகக் கொண்டு, கர்த்தரை விட்டு விலகுகிற இருதயமுள்ள மனுஷன் சபிக்கப்பட்டவன் என்று கர்த்தர் சொல்கிறார்.
* எங்கள் தேவனுடைய கரம் தம்மைத் தேடுகிறவர்கள் எல்லார் மேலும் அவர்களுக்கு நன்மையாக இருக்கிறதென்றும், அவருடைய வல்லமையும் அவருடைய கோபமும் அவரை விட்டு விலகுகிறவர்கள் எல்லார் மேலும் இருக்கிறதென்றும் நாங்கள் ராஜாவுக்கு சொல்லியிருந்தோம்.
புரிந்து கொண்டீர்களா! ஆண்டவரின் அன்பைப் பெற நினைத்தால், அவரை அன்றாடம் ஜெபியுங்கள். அவரது ஆசிக்கரம் உங்களை நோக்கி நீளும்.

வியாழன், 16 ஏப்ரல், 2015

உத்தமனாய் வாழ்வோம்!



இயேசு கிறிஸ்து இந்த உலகத்தில் அவதரித்து ஊழியம் செய்த போது 38 உவமைக் கதைகள் மூலம் அறிவுரை வழங்கினார்.
ஒரு உவமைக் கதையில், ""ஒருவர் ஒரு திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி, தோட்டக்காரர்களுக்கு அதை குத்தகையாக விட்டு வெளிநாட்டிற்குப் போயிருந்தார்,'' என்று சொல்கிறார்.



ஆண்டவர் இந்த உலகத்தைப் படைத்த போது மனிதன் வாழ்வதற்கு ஏற்றவாறு மலைகளையும், சமுத்திரங்களையும், ஆறுகளையும், அதில் பல்வேறு உயிரினங்களையும், பறவைகள், விலங்குகள் அனைத்தையும் படைத்தார். ஒவ்வொன்றுக்கும் தன் நிலையில் இருக்கும்படி அவற்றிற்கு எல்லையும் உண்டாக்கினார். மலையில் வாழும் உயிரினங்கள் பாலை வனத்திற்கும், பாலைவனத்தில் வாழ்பவை மலைக்கும் செல்வதில்லை.

அதுபோல, ஆற்றுமீன்கள் கடலிலோ, கடல்மீன்கள் ஆற்றிலோ ஜீவிப்பதில்லை. ஆனால், மனிதன் மட்டும் தனக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வீடு கட்டி குடிஇருக்க, விவசாயம், தொழில்கள் செய்து ஜீவிக்க இயற்கையாகவே கடவுள் வேலியடைத்து, நம்மிடத்தில் விட்டிருக்கிறார். நாம் எப்படி இருக்கிறோம்? இந்த உலகில் வாழ்வதற்காக குத்தகைதாரராக வந்திருக்கிறோம். உலகில் இருந்து எதையும் நம்மால் எடுத்துச் செல்ல முடியாது.

கடவுள் இந்த உலகைச் செம்மைப்படுத்த அநேக தீர்க்கதரிசிகளையும், போதகர்களையும் அனுப்பினார். வந்தவர்கள் அனைவரையும், வாழ்ந்தவர்கள் அடித்துக் கொன்று விட்டு நிமிர்ந்து கொண்டார்கள். நல்லவர்களால் திருத்த முடியாத போது, ""கடவுள் தன் ஒரே பேறான குமாரனாகிய இயேசுவைத் தந்தருளி, என் குமாரனுக்காகவாவது அவர்கள் அஞ்சுவார்கள் என்று அனுப்பினார். ஆனால் நடந்தது என்ன? அவரையும் சிலுவையில் அறைந்து விட்டனர்.

வேதம் இவ்வாறு சொல்கிறது,""திராட்சை தோட்டத்து எஜமான் .... அந்த கொடியரை கொடுமையாய் அழித்து (மத்தேயு 21:40,41) வேறு ஒருவனுக்கு திராட்சைத் தோட்டத்தைக் கொடுப்பார் என்றார்''.
நம்மால் இந்த உலகத்தின் இயற்கை வளத்தை காப்பாற்ற முடியாமல் போனால், நம் இடம் வேறு ஒருவருக்குக் கொடுக்கப்படும். வேறு சந்ததிக்கு இந்த உலகத்தை ஆண்டவர் கொடுத்து விடுவார் என்பதில் சந்தேகமில்லை. எனவே, உத்தமமான மனிதனாக உலகத்தை அதன் இயற்கை வளத்தைப் பாதுகாத்து வருங்கால சந்ததி வளமோடு வாழ துணை நிற்போம்.

You may like also

Categories

Popular