Tamil christian song ,video songs ,message ,and more

திங்கள், 5 செப்டம்பர், 2011

பரிசுத்த வேதாகமத்தை ஏன் ஆராய வேண்டும்? Dr. செல்வின்

பரிசுத்த வேதாகமத்தை ஆராய்வதின் நோக்கம், ஏதோ நாம் வேதாகமத்தைப் பற்றிய அறிவு கொண்டவர்களாக இருப்பதற்கு மட்டுமல்ல. நாம், நாமே நினைத்துக்கொள்ளும் அல்லது விரும்பும் விளக்கங்களைத் தருவதற்காகவும் அல்ல.
 நாம் தேவன் தம்முடைய வசனத்தின் மூலம் வெளிப்படுத்தி இருப்பவைகளைச் சரியான முறையில் விளங்கிக் கொள்ளவும், வாழ்க்கையில் கடைப்பிடிக்கவுமே வேதாகமத்தை ஆராய வேண்டும். நாம் தேவனுடைய வார்த்தையைப் பகுத்து, அறிந்து, உணர்ந்து, கற்றுக்கொள்ள வேண்டுமென்று தேவன் விரும்புகிறார்.
வேதாகமத்தின் உண்மைகளையும் வேதாகமம் வாக்களிக்கும் ஆசீர்வாதங்களையும் நீங்கள் உங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள விரும்பினால், வேதாகமத்தை ஆராய வேண்டும்.
பரிசுத்த வேதாகமத்தை நீங்கள் படிக்கும்போது கீழ்காணும் 4 நோக்கங்களுக்கான தெளிவான எதிர்பார்ப்புடன் நீங்கள் படிக்க வேண்டும்.
1. வேதத்தில் சொல்லப்பட்டிருப்பவைகளை தெரிந்து கொள்ளுதல் ( தகவல் )
2. வேதாகமத்தில் நீங்கள் படிக்கும் பகுதியில் இருந்து ஆண்டவர் உங்களோடு பேசுவதை அறிந்து கொள்ளுதல் ( தியானம்)
3. வேதாகம உபதேசங்களையும், உட்கருத்துக்களையும் விளங்க்கிக் கொள்ளுதல் ( விளக்கம் )
4. வேதத்தின் படி வாழ்வதற்கான தத்துவங்களை அறிந்துகொள்ளுதல் ( கடைபிடித்தல்)
இதை ஆங்கிலத்தில் என்று சொல்லலாம்.
I - INFORMATION (தகவல்)
D - DEVOTION (தியானம்)
E - EXPLANATION (விளக்கம்)
A - APPLICATION (கடைபிடித்தல்)

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular