Tamil christian song ,video songs ,message ,and more

செவ்வாய், 19 ஜூலை, 2011

நம்பினோர் கைவிடப்படுவதில்லை

கப்பர்நகூம் என்ற ஊருக்கு இயேசுநாதர் சென்றிருந்தார். அப்போது, ஒரு செல்வந்தன் அவரைச் சந்தித்தான்.
""ஆண்டவரே! என் வேலைக்காரனுக்கு திமிர்வாதம் வந்து படுத்த படுக்கையாகக் கிடக்கிறான்,'' என்றான். இயேசு அவனிடம்,""நான் வந்து அவனை குணப்படுத்துவேன்,'' என்றார். உடனே அந்த பணக்காரன், ""ஆண்டவரே! நீர் என் வீட்டுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல. ஒரு வார்த்தை மட்டும் சொல்லும், அப்பொழுது என் வேலைக்காரன் சொஸ்தமாவான்,'' என்றான்.

அதாவது, ""நீர் என் வீட்டுக்கு வரும் அளவு நான் தகுதியுடையவன் அல்ல, நீர் இங்கிருந்தே "அவன் குணமாகட்டும்' என்று ஒரு வார்த்தை சொன்னாலே, அவன் எழுந்து விடுவான்,'' என்றான் அந்த பணக்காரன். அந்தளவுக்கு அவன் இயேசுவின் வார்த்தைகள் மீது விசுவாசம் வைத்திருந்தான். இயேசு இதைக் கேட்டு ஆச்சரியப்பட்டார். தன் பின்னால் வந்தவர்களை நோக்கி, ""இஸ்ரவேலருக்குள்ளும் நான் இப்படிப்பட்ட விசுவாசத்தைக் காணவில்லை என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன்,'' என்றார்.
பின்பு அந்த செல்வந்தனிடம், ""நீ போகலாம், நீ விசுவாசித்தபடியே உனக்கு ஆகக்கடவது,'' என்றார். அந்த நாழிகையிலேயே அவனது வேலைக்காரன் சொஸ்தமானான்.

ஆம்! பல வைத்தியர்களாலும் குணம் செய்ய முடியாத நோயை ஆண்டவர் நீக்கினார். அவரை நம்பியவர்கள் கைவிடப்பட்டதில்லை. இயேசுவின் வார்த்தைகளை, நற்செய்தியை விசுவாசித்தவர்களுக்கு என்றுமே துன்பமில்லை.

  1 கருத்து:

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Blog Archive

Blog Archive

Categories

Popular