Tamil christian song ,video songs ,message ,and more

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

நியாயமாக சம்பாதியுங்கள் (பைபிள் பொன்மொழிகள்)

* முட்டாளின் வழி அவனுடைய கண்களுக்குச் சீராகத்தான் தோன்றும். ஆலோசனைக்குச் செவி கொடுப்பவன் தான் அறிஞனாவான்.

* நேர்மையாளனின் பாதை உதய ஒளி போன்றது. நடுப்பகல் வரை பரிபூரணமாக அதன் பிரகாசம் மென்மேலும் உயர்ந்து கொண்டே போகும்.

* ஒன்றுமில்லாதவன் தன்னை ஏதோவென்று நினைத்துக் கொள்வானாகில் அவன் தன்னைத்தானே வஞ்சித்துக் கொள்கிறான்.

* எந்தப் பறவையாயிருந்தாலும் அதன் கண்பார்வையின் முன்னால் வலை விரிப்பது வீணே!

* மனிதனின் இருதயம் அவனுடைய வழியை வகுக்கும். ஆனால், அவனது காலடிகளை வழிநடத்துபவர் கடவுளே.

* சிலரின் பாவச் செயல்கள் விசாரணைக்குப் போகுமுன்பே வெளியாகி விடுகின்றன. மற்றும் சிலருடையதோ விசாரணைக்குப் பிறகு தான் பின் தொடர்கின்றன.

* அநியாயத்தின் மூலம் கிடைக்கும் பெரும் வருமானத்தைவிட, நியாயமாய்ச் சம்பாதிக்கும் சொற்பமே மேலானது.

* உன் மட்டில் கவனமாயிரு. உன் சகோதரன் உனக்கெதிராக மீறி நடந்தால் கண்டிக்கலாம். ஆனால், மனம் வருந்து வானேயானால் அவனை மன்னித்துவிடு

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Categories

Popular