Tamil christian song ,video songs ,message ,and more

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

அனைவருக்கும் மேலானவர்(பைபிள் பொன்மொழிகள்)

* உன்மேல் இன்று நான் விண்ணையும்  மண்ணையும் சான்றாக அழைத்து,  வாழ்வையும் சாவையும் ஆசியையும்

சாபத்தையும் உனக்கு முன் வைக்கிறேன். நீயும் உனது வழித்தோன்றல்களும் வாழும் பொருட்டு வாழ்வைத் தெரிந்து கொள்.

* உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவி கொடுத்தால், இந்த ஆசிகளெல்லாம் உன்மேல் வந்து உன்னில் நிலைக்கும். நீ நகரிலும் ஆசி  பெற்றிடுவாய்; வயல் வெளியிலும் ஆசி பெற்றிடுவாய்.

* ஆண்டவரைத் தன் கடவுளாகக் கொண்ட இனம்  பேறு பெற்றது; அவர் தமது உரிமைச் சொத்தாகத்  தெரிந்தெடுத்த மக்கள் பேறு பெற்றோர்.

* நிலையில்லாச் செல்வத்தில் நம்பிக்கை வைக்காமல்
நம்முடைய இன்பத்திற்காக அனைத்தையும் நிறைவாக அளிக்கும் கடவுளை மட்டுமே எதிர்நோக்கி இருக்க வேண்டும்.

* சகோதர அன்பைப் பற்றி உங்களுக்கு எழுத வேண்டிய தேவை இல்லை. ஏனெனில் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்த கடவுளிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டவர்கள்.

* அனைவருக்கும் கடவுளும் தந்தையுமானவர் ஒருவரே, அவர் எல்லாருக்கும் மேலானவர்.

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Categories

Popular