Tamil christian song ,video songs ,message ,and more

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

பைபிள் பொன்மொழிகள்

* ஒவ்வொருவரும் தங்களை விட மற்றவரை உயர்வாக மதிப்பிடுங்கள். மனிதன்
மதிப்பிடப்படுவது செயல்களாலேயன்றி, வெறும் நம்பிக்கையினால் மட்டுமல்ல.
* நல்லவரின் நாக்கு அரிய வெள்ளி;
தீயவனுடைய மனமோ அற்பவிலையும் பெறாது.
* மரங்களின் மூலவேர் அருகே கோடாரி வைக்கப் பட்டுள்ளது. ஆகையால், நற்கனி கொடாத ஒவ்வொரு
மரமும் அடியோடு வெட்டப்பட்டு அக்கினியிலே போடப்படும்.
* நாம் இந்த உலகிற்கு ஒன்றும் கொண்டு வந்ததில்லை. இந்த உலகிலிருந்து ஒன்றையும் கொண்டு போகப்
போவதுமில்லை.
* பொல்லாதவர்களைக் குறித்து எரிச்சல் அடையாதே. நியாயக்கேடு செய்கிறவர் மீது பொறாமை கொள்ளாதே. ஏனெனில், அவர்கள் புல்லைப் போல வெகு சீக்கிரத்தில் அறுப்புண்டு, பசும்பூண்டைப் போல வாடிப் போய்
விடுவார்கள்.
* அடங்காதவர்களை எச்சரியுங்கள். பலவீன மனம் படைத்தவர்களைத் தேற்றுங்கள். எளியவர்களை
ஆதரியுங்கள். எல்லா மனிதர்களிடமும் பொறுமையாய் இருங்கள்

0 comments:

கருத்துரையிடுக

ப்ளீஸ் உங்க கமெண்ட்ஸ் இங்க எழுதுங்க ....

You may like also

Categories

Popular