Tamil christian song ,video songs ,message ,and more

வெள்ளி, 31 டிசம்பர், 2010

கடவுள் இல்லை..........

கடவுள் இல்லை ‘ என்று சொல்கிறவர்களை நாத்திகர் என்கிறோம்; நாத்திகர் கடவுள் இல்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமா,அது ஏற்புடையதா என்று யோசிப்பதற்கு முன்னர் ” கடவுள் இல்லை ” எனும் கொள்கையிலுள்ள இல்லை என்ற சொல்லுக்குரிய கொள்கையை ஆராயவேண்டுமல்லவா?
இல்லை என்பதைக் குறித்த விளக்கம் ஆங்கிலத்தில் Absence of Something என்றும் Something that does not exist என்றும் கூறப்பட்டுள்ளது; இதன்படி இருக்கும் ஏதோ ஒன்று இல்லாமலிருப்பதே இல்லை (What is Something ? and what is Nothing ?) என்பதன் கொள்கையாம்;
உதாரணத்துக்கு, என் கையில் பணமில்லை என்றோ என் பாக்கெட்டில் அல்லது என் சட்டை பையில் பணமில்லை என்றோ சொல்வோமானால் பணம், இல்லை எனும் இரு சொற்களில் பணம் என்பதைக் குறித்து அறிந்திருந்தாலே அது இல்லை என்று சொல்லமுடியும்;
பணத்தின் அருமை யாருக்கு தெரியும்,அதனைப் பயன்படுத்தியவருக்கே அல்லவா? மனநிலை சரியில்லாதோருக்கும் குழந்தைகளுக்கும் பணத்தைக் குறித்து ஒன்றும் தெரியாது;
பணம் என்பது என்ன, அதை யார் உண்டாக்கினார், அதன் நோக்கம் என்ன, அதன் அவசியம் என்ன‌ போன்ற அம்சங்களே பணம் என்ற சொல்லின் ஆதாரமாக இருக்கிறது; அதனை உணர்ந்த பின்னரே அது இல்லாததைக் குறித்து அறிந்தோ அல்லது வருந்தியோ அது இல்லை என்று கூறமுடியும்;
இதுபோலவே கடவுள் இல்லை என்று கூறுவதற்கு முன்னர் அவர் யார் என்ற கொள்கையைக் கூறிய பிறகே அவர் இல்லை என்று கூறமுடியும்; கடவுளைக் குறித்து எதுவும் தெரியாமலே கடவுள் இல்லை என்பது ஒரு பொருளைக் குறித்து இல்லை என்று சொல்லக்கூடிய ஆதாரக் கொள்கைக்கு முரணானது ஆகும்; இல்லாத ஒன்றை இல்லை என்று கூறவேண்டிய அவசியமென்ன‌?

வியாழன், 23 டிசம்பர், 2010

ஆபிரகாம் லிங்கன்


அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருந்த காலம். அப்பொழுது ஜனாதிபதியாக இருந்த ஆபிரகாம் லிங்கன் ஒருமுறை அரசியல்வாதி ஒருவரைப் பிரியப்படுத்துவதற்காக ஒரு பகுதியில் முகாமிட்டிருந்த பெரும்பகுதியான ராணுவத்தினரை அந்த இடத்தைவிட்டு வேறு ஒரு இடத்திற்குச் செல்லும்படி உத்தரவிட்டார். யுத்த செயலாளரான எட்வின் ஸ்டான்டன் அந்த உத்தரவை செயல்படுத்த மறுத்துவிட்டார். அதோடு, ‘‘இப்படி உத்தரவைப் பிறப்பித்த ஆபிரகாம் லிங்கன் ஒரு முட்டாள்’’ என்றும் விமர்சித்தார். இது ஆபிரகாம் லிங்கனுக்கு தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட லிங்கன், ‘‘ஸ்டான்டன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். ஏனெனில் அவர் எப்பொழுதுமே காரியங்களை நிதானித்து அறிகிற புத்திக்கூர்மையுள்ளவர்’’ என்று பாராட்டினார். அவரை நேரில் சந்திக்க வருமாறு அழைத்தார்.

இருவரும் சந்தித்துப் பேசினார்கள். லிங்கனின் உத்தரவை செயல்படுத்த மறுத்த தன் நியாயமான காரணங்களையும், நிறைவேற்றியிருந்தால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் விளக்கிச் சொன்னார் ஸ்டான்டன். லிங்கன் அதை அப்படியே ஏற்றுக்கொண்டார். ‘‘உங்கள் விமர்சனம் என்னை சரி செய்துகொள்ள உதவியது’’ என்று புன்னகையோடு சொன்னார்.ஆபிரகாம் லிங்கனின் மனப்பக்குவத்தை சிந்தித்துப் பாருங்கள். ‘ஜனாதிபதியான என் உத்தரவை நிறைவேற்றவில்லையே; என்னை மோசமான வார்த்தையால் விமர்சிப்பதா?’ என்ற ஆணவமோ, கோபமோ இன்றி எவ்வளவு சாந்த குணத்தோடும், மிகுந்த தாழ்மையோடும் அந்த சம்பவத்தைக் கையாண்டிருக்கிறார்! இவை அவருடைய ஆன்மிக உணர்வின் முதிர்ச்சியைக் காட்டுகின்றன.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தமது வாயிலாகவே தமது குணாதிசயத்தைச் சொல்லும்போது, ‘நான் சாந்தமும், மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்’ (மத்தேயு 11: 29) என்று சொன்னார். ஆபிரகாம் லிங்கன் ஆண்டவருடைய வார்த்தையாகிய வேதாகமத்தை கருத்தோடு படித்து உணர்ந்ததால் அந்த வார்த்தைகளை அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தவும் செய்தார். ஆகவே அவர் உண்மையிலே இயேசு கிறிஸ்துவிடமிருந்து அவருடைய சுபாவங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறார்; அவற்றைத் தன் செயல்களில் பிரதிபலித்தார். கற்பதைவிட அவற்றை நடைமுறைப்படுத்துவதே மேன்மையானது.

நமக்கு விரோதமான விமர்சனங்களை நாம் சந்திக்கும்போது நமது பிரதி செயல் எப்படி இருக்கிறது? இயேசுவின் சுபாவத்தை பிரதிபலிக்கிறோமோ? அல்லது நம்முடைய சுய சுபாவத்தைப் பிரதிபலிக்கிறோமோ? அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வதை ஆழ்ந்து சிந்தித்துப் பாருங்கள்: ‘அவர்கள் தேவனை அறிந்திருக்கிறோமென்று அறிக்கை பண்ணுகிறார்கள்; கிரியைகளினாலோ அவரை மறுதலிக்கிறார்கள்; அவர்கள் அருவருக்கப்படத்தக்கவர்களும், கீழ்ப்படியாதவர்களும், எந்த நற்கிரியையுஞ் செய்ய ஆகாதவர்களுமாயிருக்கிறார்கள்’ (தீத்து 1: 16).

கிறிஸ்துவும் விவேகானந்தரும்

இந்து மத சீர்திருத்தவாதிகளில் முண்ணணி வகிப்பவர் கொல்கத்தாவில் பிறந்த நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta -January 12, 1863 – July 4, 1902). இவர் பின்பு சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) என பிரபலமாக அறியப்பட்டார். இந்தியாவின் பெருமை, யோகா மற்றும் வேதாந்தங்களை மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு சென்ற பெருமை இவரையே சாரும்.

இவர் இவ்வாறாக சொல்கிறார்.

"கீழை நாட்டைச் சார்ந்தவனான நான், நாசரேத்து நல்கிய இயேசு நாதரை இறைஞ்சுவதாயிருந்தால்,எனக்கு ஒரே வழிதான் உண்டு. அதுயாதெனில், அவரைக் கடவுளாகத் தவிர வேறு முறையில் என்னால் வழிபட முடியாதென்பதே"

-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 2; பக்கம் 453)

""மகனைப் பார்க்காதவர் தந்தையைப் பார்க்காதவராவர்"என்பது விவிலிய வேத வாக்கு. மகனைப் பார்க்காமல், தந்தையைக் காண இயலாது. மகனைக் காணாமலே தந்தையைக் காணலாம் என்பது பொருளற்ற வீண்பேச்சு; குழப்பம் மிகுந்த தெளிவில்லாதத் தத்துவம்; பகற்கனா, ஆன்ம வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு பற்றுக்கோடு வேண்டுமானால்,ஏசுவின் உருவிலே விளக்கமுற்று நிற்கும் கடவுளை மிகவும் நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள்"

-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 270,271)


"தீமையைத் தீமையால் எதிர்க்காதே" என்ற இயேசு நாதரின் போதனையை இந்த உலக்ம் கடைபிடிக்கவில்லை. அதனால் தான் இவ்வுலகம் இவ்வளவு தீமையுள்ளதாக இருக்கிறது".

-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 7; பக்கம் 119)

"இந்திவாவிற்குக் கிறிஸ்தவ ஞானப்பணியாளர்கள் வேண்டும். நூற்றுக்கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் அவர்கள் இங்கே வந்து திரளட்டும். கிறிஸ்துவின் தூய வாழ்வின் வரலாற்றை எங்களுக்கு நன்கு எடுத்து ஓதுவீர்களாக. அவர் தந்த ஞான நன் மொழி எங்கள் சமூகத்தின் இதயத்தை ஊடுருவிப் பாயட்டும். இயேசு நாதரைப் பற்றி ஒவ்வொரு சிற்றூரின் மூலை முடுக்குகளிலும் பிரசாரம் செய்யுங்கள்".


-சுவாமி விவேகானந்தரின் ஞான தீபம்;சுவாமிகளின் நூற்றாண்டு விழா பதிப்பு 1963 பழைய பதிப்பு; சுடர் 1; பக்கம் 128,129)

பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்றால் என்ன?



இன்றைய விசுவாசிகளில் பலர் தங்களுக்கு ஆவியானவரின் கிருபை கிடைத்திருப்பதாக நினைக்கிறார்கள். இதில் தவறு ஒன்றும் இல்லைதான். ஆனால் அதே ஆவியானவரின் கிருபை மற்றவருக்கும் உண்டு என்பதை அவர்கள் நினைப்பதில்லை. தேவ ஆவியானவர் பட்சபாதமுள்ளவரல்ல. தம்மை வாஞ்சையோடு தேடுகிற அனைவருக்கும் அவரது கிருபை உண்டு. எனவேதான் இயேசு இவ்வாறு கூறினார்.

யோவான் 7:37-39 இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார். தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார்.

லூக்கா 11:13 பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

லூக்கா 8:18 உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்.

தாகம் என்பது வாஞ்சையைக் குறிப்பிடுகிறது. மேற்கூறிய வசனங்களின்படி பார்த்தால், யாருக்கெல்லாம் பரிசுத்தஆவியின் மீது மெய்யான வாஞ்சை இருக்கிறதோ அவர்கள் அனைவருக்கும் பரிசுத்தஆவி தாராளமாக வழங்கப்படும் என்பதே உண்மை.

பரிசுத்தஆவியை நாம் எப்படி பெறுகிறோம், பரிசுத்தஆவியை நாம் பெற்றுள்ளதை எப்படி அறிவது, பரிசுத்தஆவியை நாம் பெற்றுள்ளதை மற்றவர்கள் எப்படி அறிவார்கள், பரிசுத்தஆவி நமக்குள் வருவதை நம்மால் உணரமுடியுமா என்பது போன்ற பல கேள்விகளுக்கு, ஆளாளுக்கு ஒரு பதில் சொல்கின்றனர்.

பொதுவாக பரிசுத்தஆவியைப் பெற்றவர்கள் அந்நிய பாஷை பேசுவார்கள், தங்களை மறந்து பரவசமாக ஆடுவார்கள் எனும் பரவலான கருத்து நம்மிடையே காணப்படுகிறது. அந்நிய பாஷை பேசுதல் என்பது ஆவியின் வரங்களில் ஒன்றாக இருப்பது மெய்தான். அப்போஸ்தலரின் நாட்களில், ஒருவர் மீது பரிசுத்தஆவி இறங்குவதை மற்றவர்கள் அறியுமளவு, பரிசுத்தஆவியைப் பெற்றவர்கள் ஒரு வித்தியாசமான அனுபவத்தினுள் சென்றனர் என்பதும் உண்மைதான் (அப்போஸ்தலர் 8:18).

ஆனால், இந்நாட்களில் பரிசுத்தஆவியைப் பெறுபவர்களுக்கும் அதேவிதமான ஓர் அனுபவம் வரவேண்டும் என்பதை நான் ஏற்கவில்லை. அப்போஸ்தலரின் காலம் வேறு, இன்றைய காலம் வேறு. அந்நாட்களில், பரிசுத்தஆவி பற்றிய அறிவு பலருக்கும் இல்லாததால், பரிசுத்தஆவி வருவதை அவர்கள் சரீரப்பிரகாரமாக உணரவேண்டியதாயிருந்தது. எனவேதான் பெந்தேகோஸ்தே நாளில் பலத்த காற்று அடித்து, வானத்திலிருந்து முழக்கம் உண்டாகி, அக்கினிமய நாவுகள் காணப்படுகையில் பரிசுத்தஆவி இறங்கியது. ஆனால் அதற்குப்பின் பரிசுத்தஆவி வரும்போது பெந்தேகோஸ்தே நாளில் நிகழ்ந்ததுபோல் நிகழவில்லை. ஒவ்வொருமுறை பரிசுத்தஆவி வரும்போதும் ஒவ்வொருவிதமான நிகழ்வுகள் நிகழ்ந்தன.

அப்போஸ்தலர் நடபடிகளில் பின்னால் போகப்போக, பரிசுத்தஆவி இறங்குகிறதைப் பற்றிய குறிப்புகள் அதிகமாகக் காணப்படவில்லை.

எனவே பரிசுத்தஆவி வரும்போது இப்படித்தான் நடக்கவேண்டுமென்கிற எந்த விதியும் கிடையாது.

இந்நாட்களில் பலரும், நான் அபிஷேகம் பெற்றுவிட்டேன், நீங்கள் பெற்றுவிட்டீர்களா என ஒருவருக்கொருவர் கேட்கும் ஒரு வழக்கம் காணப்படுகிறது.

அபிஷேகம் என்றால் என்ன? உச்சந்தலையிலிருந்து உடல்முழுவதும் தண்ணீரையோ பாலையோ அல்லது வேறு ஏதாவதையோ ஊற்றி கழுவுவதைதான் நீரபிஷேகம், பாலபிஷேகம் என்றெல்லாம் கூறுகிறோம். அதேவிதமாக, பரிசுத்தஆவி உச்சந்தலை முதல் உடல்முழுவதும் ஊற்றப்பட்டு அதைக்கொண்டு உடலை சுத்திகரிப்பதுதான் பரிசுத்தஆவியின் அபிஷேகமாகும். நடைமுறையில், இந்த அபிஷேகம் நமக்கு எவ்வாறு நடக்கும்? பின்வரும் வசனங்களைப் படிப்போம்.

எபேசியர் 5:25-27 அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து, தாம் அதைத் திருவசனத்தைக்கொண்டு தண்ணீர் முழுக்கினால் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குகிறதற்கும், கறைதிரை முதலானவைகள் ஒன்றும் இல்லாமல் பரிசுத்தமும் பிழையற்றதுமான மகிமையுள்ள சபையாக அதைத் தமக்குமுன் நிறுத்திக்கொள்வதற்கும் தம்மைத்தாமே அதற்காக ஒப்புக்கொடுத்தார்.

திருவசனத்தால் நம் உச்சந்தலை முதல் உடல் முழுவதும் (அதாவது நம் சிந்தனை முதல், உடலின் செயல்கள் வரை) கழுவப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, பரிசுத்தமாவதன் மூலம் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தை நாம் பெறலாம். அதாவது பரிசுத்தத்தில் வாஞ்சை கொண்டு வசனங்களைக் கேட்டு அவற்றின்படி நடக்கும்போது, மேலும் மேலும் நாம் வசனங்களால் உணர்த்தப்பட்டு மேலும் மேலும் பரிசுத்தமாவதன் மூலம் நாம் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தைப் பெறலாம்.

இயேசுவைத் தவிர, மற்றவர்கள் அபிஷேகம் பெற்றதைக் குறித்து புதிய ஏற்பாட்டில் 3 வசனங்களில் மட்டுமே கூறப்பட்டுள்ளது.

2 கொரிந்தியர் 1:21 உங்களோடேகூட எங்களையும் கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுத்தி, நம்மை அபிஷேகம்பண்ணினவர் தேவனே.

1 யோவான் 2:20 நீங்கள் பரிசுத்தராலே அபிஷேகம் பெற்றுச் சகலத்தையும் அறிந்திருக்கிறீர்கள்.

1 யோவான் 2:27 நீங்கள் அவராலே பெற்ற அபிஷேகம் உங்களில் நிலைத்திருக்கிறது, ஒருவரும் உங்களுக்குப் போதிக்கவேண்டுவதில்லை; அந்த அபிஷேகம் சகலத்தையுங்குறித்து உங்களுக்குப் போதிக்கிறது; அது சத்தியமாயிருக்கிறது, பொய்யல்ல, அது உங்களுக்குப் போதித்தபடியே அவரில் நிலைத்திருப்பீர்களாக.

இம்மூன்று வசனங்களிலிருந்து நாம் என்ன அறிகிறோம்?

1. கிறிஸ்துவுக்குள் நாம் ஸ்திரப்படுவதன் மூலம் பரிசுத்தஆவியின் அபிஷேகத்தைப் பெறுகிறோம். கிறிஸ்துவுக்குள் ஸ்திரப்படுதல் என்றால், கிறிஸ்துவின் வசனங்கள் எல்லாவற்றின்படியும் நடப்பதிலும் கிறிஸ்துவுக்காக வாழ்வதிலும் ஸ்திரமாக (உறுதியாக) இருத்தல் என்பதே.

2. பரிசுத்தராலே அபிஷேகம் பெறும்போது நாம் சகலத்தையும் அறிந்தவர்களாகிறோம். “சகலத்தையும்” என யோவான் குறிப்பிடுவது “சகல சத்தியத்தையே” என 21-ம் வசனத்தில் பார்க்கிறோம். “சத்தியம்” என்பது எது? தேவனுடைய வசனமே சத்தியம் (யோவான் 17:17); அந்த வசனத்தினால்தான் நாம் பரிசுத்தமாக்கப்படவேண்டுமென்று யோவான் 17:19-ல் இயேசு கூறுகிறார். எனவே அபிஷேகம் என்பது, சத்தியமாகிய சகல தேவவசனங்களை அறிந்து அவற்றின்படி நடக்கக் செய்கிறது என அறிகிறோம்.

3. அவ்விதமாக சகல தேவவசனங்களாலும் நாம் அபிஷேகிக்கப்பட்டுவிட்டால், அதன்பின் வேறு யாரும் நமக்குப் போதிக்கவேண்டியதில்லை. ஆம், தேவவசனங்களுக்கு மிஞ்சின எந்தப் போதனையும் இல்லை. அந்தப் போதனையில் நாம் நிலைத்திருக்கவேண்டியதே நம் கடமை. அப்போது அந்த அபிஷேகம் நம்மில் நிலைத்திருக்கும்.

இவ்விதமான அபிஷேகத்தைத்தான் வேதாகமம் கூறுகிறது. அந்த அபிஷேகத்தின் அனுபவத்திற்குள் நான் அனுதினமும் கடந்து செல்கிறேன். அதாவது, வசனங்களை வாஞ்சையோடு தேடி, அவற்றின்படி நடக்க நான் வாஞ்சிக்கிறேன். தேவனும் என் வாஞ்சையை நிறைவேற்றி, நாளுக்குநாள் என்னை அபிஷேகத்தில் வளரச் செய்கிறார்.

இவ்விதமான பரிசுத்தஆவியின் அபிஷேக அனுபவத்தினுள் நான் நாள்தோறும் கடந்துகொண்டிருக்கிறேன்.

ஒருவேளை ஏதோ ஒரு குறிப்பிட்ட வேளையில் ஒரு பரவசமான அனுபவத்தின் மூலம் பரிசுத்தஆவியின் அபிஷேக அனுபவத்தினுள் நான் கடந்துசென்றுள்ளேனா என நீங்கள் கேட்டால், அக்கேள்விக்கு இல்லை என்றுதான் நான் பதில் சொல்வேன்.

நான் அறிந்தவரை, அப்படி ஒரு அபிஷேக அனுபவம் பற்றி வேதாகமத்தில் எந்த வசனமும் கூறவில்லை என நான் நம்புகிறேன். ஒருவேளை யாரேனும் அப்படி ஓர் அனுபவத்தைப் பெற்றிருந்தால், அவர்கள் எந்த ஆவியின் மூலம் அந்த அபிஷேகத்தைப் பெற்றனர் என்பதை நான் அறியேன்.

புதன், 8 டிசம்பர், 2010

உபவாசம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன


உபவாசம் என்பது ஒருவர்சிறிதளவு உணவையோ அல்லது உணவிண்றியோ, விருப்பியோ அன்றி அவசியதேவைக்காகவோ இருத்தலாகும். மருத்துவதேவைக்காக உண வைக்குறைத்து தேவையற்ற உணவுகளை வெளியேற்றுவதற்காகவும் மேற்கொள்ளப்படுகின்றது.
மறுபக்கத்தில், ஆவிக்குரிய உபவாசம் என்பது, சாப்பிடும் உணவின்வகைகளின் அளவைக் குறைப்பதாகும். இதன் அர்த்தம் செய்யும் தொழில்பாடுகளின் அளவைக் குறைத்து அதற்குரிய நேரத்தை ஜெபத்திலும் தியானத்திலும் வேதவாசிப்பிலும் செலவிடுதலாகும். புதியஏற்பாட்டு வசனங்கள் “உபவசம்” என்பது சாப்பாடின்றி இருத்தல் என்றுபொருள்படும்.மூன்றுவிதமான உபவாசங்கள்பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.


1.சாதாரணமானது:-இவ்வகையின்போது ஒருகுறிப்பிட்ட காலத்திற்கு உணவு எடுப்பதில்லை, அதாவது நீர்வகையான உணவுவகைகளும் அருந்துவதில்லை.
2.பகுதிநேரமானது:-இவ்வகையின்போது உணவானது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது, அத்துடன் சிலவகையான உணவுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.
3.முற்றுமுழுதானது:- இவ்வகையின்போது , உடலுக்குள் எந்தவகையிலும் அதாவது நீராகரமோ அன்றி உணவுவகைளோ உட்கொள்வதில்லை.


ழைய ஏற்பாட்டுக்காலத்தில், உபவாசம் என்பது ஒருவர் தனது உணவை ஒதுக்கிவெறுத்து கடவுளின் கோபத்தைக் குறைப்பதற்கும், தனக்கு பாவமன்னிப்பை பெற்றுக் கொள்வதற்கும் செய்யும் செயற்பாடாகும். மிகவும் அவசரநேரங்களில், ஜனங்கள் உபவாசித்து தங்களைப் பிரச்சனைகளிலிருந்து காக்கும்படி கர்த்தரை வேண்டிக் கொள்ளுதலாகும்.(நியாயாதிபதிகள். 20:26, 1 சாமு.7:6, 1ராஜா. 21:9, 2நாளா.20:3, எரேமியா 36: 6,9). தனியாக மக்கள் உபவாசிப்பது தங்களை கர்த்தர் பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கும் வண்ணமாக.(2 சாமு. 12: 16-20, 1ராஜா. 21: 27, சங்கீ. 35:13, 6910) உபவாசத்தின் ஒரு பகுதியாக ஜெபம் செய்தல்வேண்டும்.( எஸ்றா. 8:21,நெகேமியா 14: 12)
கிரமமான உபவாசம் காலையிலிருந்து மாலைவரை நீடிக்கின்றது, இரவில் உணவு உடகொள்ளப்படுகின்றது.(நியா.20: 26, 1சாமு. 1:12). ஆனால் மொர்தகாய் அழைத்த்து போல் நீண்ட மூன்று நாட்களுக்கான ( இரவும்பகலும் உணவு உட்கொள்ளாதிருத்தல் எஸ்தர். 4:16), சவுலின் மரணத்தின்போது ஏழு நாட்கள் உபவாசம் ( 1.சாமு. 31:13, 2. சாமு.3:35) விஷேசித்த உபவாசம் சீனாய் மலையில்மேசேயினால் ஏற்பாடு செய்யப்பட்ட 40 நாள் உபவாசம்.( யாத்.34: 28) தானியேல் தரிசனம்பெற்றுக் கொள்வதற்கு முன்பாக மூன்று வாரங்கள் உபவாசம்ஃமேற்கொண்டார்.( தானி. 9:3, 10:3, 12)
உபவாசம் பழைய ஏற்பாட்டுக்காலத்தில் தவறாகப்பயன்படுத்தப்பட்டது. இது வஞ்சகமாக பகட்டுக்காக மேற்கொள்ளப்பட்டது, கர்த்தருக்காக மேற்கொள்ளப்படவில்லை, தாங்கள் ஆவிக்குரியவர்கள் என்றும், கடவுள்பயம் உள்ளவர்கள் என்றும்வெளியில் காண்பிப்பதற்காக உபவாசித்தார்கள். திர்க்கதரிசிகள் இவ்வகையான உபவாசங்களுக்கு எதிராக புலம்பினார்கள், எரேமியா புத்தகத்தில் உள்ளதுபோல். அதில் கர்த்தர் சொல்லுகிறார்,” அவர்கள் உபவாசித்தாலும் அவர்களின் அழுகையைக்கேட்க மாட்டேன்” (எரேமியா. 14: 12, ஏசா. 58: 1-10)

புதிய ஏற்பாட்டுக்காலத்திற்கும் பழைய ஏற்பாட்டுக்காலத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதிகளில் உபவாசம் செய்வதில் புதிய வகையான வழக்கம் ஏற்பட்டது. ஜனங்கள் பொருத்தனைகளை உபவாசிப்பதன் மூலம் நிறைவேற்றினார்கள். செய்த தவறுக்கு மனமிரங்குதல்,குற்றத்திற்கு மன்னிப்புகேட்டல் என்பன உபவாசத்தின் போது இணைந்துவந்தன, அத்துடன் ஜெபம்செய்தல் மிகவும் உறுதுணையாக இருந்த்து. விஷேசித்த உபவாச ஜெபத்தைச் செய்து பாவமன்னிப்பு கேட்டார்கள். அனேக போதகர்களின்  அபிப்பிராயத்தின்படி உபவாசம் என்பது அனேகரின் ஆரம்ப தெய்யபயத்தை வெளிக்காட்டுகின்றது. அனேகர் உபவாசத்தின் போது தங்கள் முகத்தை துக்கமாக வைத்திருந்து தங்கள் இருளை அகற்ற வழிதேடினார்கள்.
யேசுக்கிறிஸ்து வித்தியாசமாக உபவாசத்தை வெளிப்படுத்தினார். பிசாசினால் சோதிக்கப்பட்ட போது உபவாசித்தார்.( மத். 4: 2, லூக் 4:2) அத்துடன் மலைப்பிரசங்கத்தில் உபவாசத்தைப்பற்றிப்
போதித்தார்.(மத்.6: 16-18)   இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் யேசுகூறிய வார்த்தைகளைக் கொண்டு உபவாசம் பற்றிய அவரது கருத்துக்களைப் புரிந்துபொள்ள முடியும்.
யேசுக்கிறிஸ்துவின் பிசாசின்சோதனை மிகவும் முக்கியபோராட்டத்தின் மத்தியில் இடம்பெற்றது.அவர் பிசாசின்சோதனைக்கு முகம் கொடுக்கும்வண்ணம் ஆவியானவரினால் வனாந்தரத்திற்கு அனுப்பப்பட்டார்.அவர் முற்றுமுழுவதாக கர்த்தரிலே தங்கியிருந்தபடியால், உபவாசித்து ஜெபம்பண்ணினார்.
யேசுவாழ்ந்த காலத்தில் வாழ்ந்த போதகர்மார்களின் கருத்துக்களைவிட யேசுவின் மலைப் பிரசங்கத்தில் உபவாசம் பற்றி வெளிப்படுத்திய கருத்துக்கள் வித்தியாசமானவையாகும்.மக்களுக்கு காண்பிக்கக் கூடிய வகையான உபவாசத்தை யேசு கண்டிக்கிறார். அவர் இதற்கு புதியபெயரைக் கொடுக்கிறார். உபவாசம் என்பது கர்த்தருக்கு ஊழியம்செய்தலாகும். இந்த புதிய கருத்னதானது யேசுவின் நம்பிக்கையும் இரட்சிப்பும் என்ற பிரசங்கத்தின் ஒருபகுதியாகும்.. மணவாளனாகிய யேசு இங்கு இருக்கிறார், இது மகிழ்ச்சியின் காலமாகும், இது துக்கத்தின் காலமல்ல. மேசியாவாகிய இரட்சகரின் வருகையானது கெட்ட காலத்தின் வல்லமையை உடைத்தெறிந்துள்ளது. இதன் கருத்தானது உபவாசம் என்பது  கிறிஸ்து  ​ கொண்டுவரப்பட்ட சந்தோஷத்திற்கும் மகிழ்ச்சிக்கும் முரண்பாடுள்ளதாய் இருக்கிறது, ஆனால் கிறிஸ்த்துவின் ராஜ்யமானது இன்னமும் உலகில் பூரணமாக வராதபடியால், இன்னமும் உபவாசம் பண்ணவேண்டிய தேவையுள்ளது. இது ஜெபத்தின் ஒரு பகுதியாகும், கர்த்தருக்கு முன்பாக நாம் மிகவும் அமைதியாக ஜெபம்செய்தல் வேண்டும்.

உபவாசம்:- அவிக்குரிய ஒழுக்கத்தில் உபவாசம் எவ்வாறு உபயோகப்படுகிறது.?
2.நாளாகமம்:-20: 3 அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத்தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான். கர்த்தர் அவர்களின் ஜெபத்தைக் கேட்டு அவர்களுக்காக யுத்தம்செய்து வெற்றியைக் கொடுத்தார். ஆபத்துக்கள் நேரிடும் சமயங்களில் கர்த்தருடைய பாத்த்தில் உபவாசத்துடன் காத்திருந்து ஜெபம் செய்யும் போது கர்த்தர் எங்களை இரட்சிக்கப் போதுமானவராக இருக்கிறார்.
உபவாசம் மனம்திரும்புதலின் ஒரு பகுதியாகும்.:-தேசம் அழிவைநோக்கிக் கொண்டிருக்கும் போது,யோசபாத் தனது மக்களை கர்த்தரின் பாதத்தில் உபவாசத்துடன் காத்திருக்கும் படிவேண்டிக் கொண்டான். தங்களுடைய நாளாந்த வேலைகளை எல்லாம்செய்யாமல் கர்த்தரு டைய பாத்த்தில் காத்திருந்து தங்கள் பாவங்களுக்காக மனம்வருந்தி  உதவிக்காக மன்றா டினார்கள். விஷேடதேவையுள்ள காலங்களில் உபவாசத்துடன் கர்த்தரைத்தேடுதல் மிகவும் பயனுடையதாகவிருக்கும்..
எஸ்றா. 8:21.அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும், எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருட்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும் , நான் அங்கே அகாவா நதியண்டையில் உபவாசத்தைக்  கூறினேன்.
உபசாசம் ஒரு ஜெபமாகவிருக்கமுடியும்:-கர்த்தருடைய வாக்குறுதிகள் மக்களைப்  பாதுகாக்கும் என்று எஸ்றா அறிந்திருந்தான்,ஆனால் அவற்றை அவன் பெற்றுக் கொள்ள வில்லை. ஜெபத்தின்மூலம் உரிய ஆசீர்வாங்கள் கிடைக்கும் என்பதையும் அவன் அறிந்திருந்தான். அதனால் எஸ்றாவும் மக்களும் உபவாசித்து தங்களைத் தாழ்த்திக் கொண்டார்கள். அத்துடன் அவர்களுடைய ஜெபத்திற்கு நல்ல பதிலும் கிடைத்தது.உபவாசத்தின்மூலம் உணவை ஒதுக்கி தங்களைத் தாழ்துவது தாங்கள் உண்மையிலேயே கர்த்தரிலேயே தங்கியுள்ளோம் என்பதை வெளிப்படுத்தலாகும்.உபவாசிப்பதன்மூல்ம் கத்த்தரைத் தியானிப்பதற்கும் துதிப்பதற்கும் ஜெபிப்பதற்கும் அதிகம் நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அனேகமாக நாம் மேலெழுந்தவாறாக ஜெபம் செய்கிறோம். ஊக்கமான ஜெபம், மாறாக, அதிக கவனத்துடன் ஜெபித்தல் வேண்டும்.இவ்வாறான ஜெபம் கர்த்தருடைய விருப்பத்தைத் தொட்டு வருகிறது, அத்துடன் எங்களில் உண்மையான மாற்றத்தைக் கொண்டுவருகிறது.ஊக்கமான ஜெபம் இல்லாதவிடத்து, கர்த்தருடைய  விரைவான செயற்பாடுகளை செயற்படுதவிடாமல் தாமதம்செய்கிறோம்.
மத்.6:17-18.:- நீயோ உபவாசிக்கும் போது , அந்த உபவாசம் மணுஷருக்குக்  காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே  காணும்படியாக, உன் தலைக்கு  எண்ணெய்பூசி, உன் முகத்தைக கழுவு. அப்பொழது அந்தரங்கத்தில் பார்க்கிற உன்பிதா, உனக்கு வெளியரங்கமாய்ப் பதிலளிப்பார்.

சரியான தேவைக்காகவே உபவாசம் செய்தல் வேண்டும்.:- உணவின்றி உபவாசம்செய்தல் அதிகநேரம் ஜெபத்தில் இருப்பதற்காகச் செய்யப்படுகிறது. இது மிகவும் சிறப்பானதும் கஸ்டமானதுமாகும். இதன்மூலம் அதிகநேரம் ஜெபம் செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கிறது, சுய ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ள முடியும், அதிக உணவின்றி ஜீவிக்கமுடியும் என்பதை ஞாபகப்படுத்தும், அத்துடன் கர்த்தருடைய வரங்களைப் பயன்படுத்த முடியும்.யேசு உபவாசத்தை பிழையானது என்று கூறவில்லை, ஆனால் மற்றவர்கள் அறியும்படியான போலித்தனமானதை வெறுத்தார். வருடத்திற்கு ஒருமுறை யூதர்கள் கட்டாயம் பாவநிவர்த்திசெய்யும் நாளில் உபவாசித்தல் வேண்டும்.(லேவி. 23: 32) பரிசேயர் இருவாரங்களுக்கு ஒருமுறை உபவாசித்து தங்கள் பரிசுத்த்த்தை காண்பிப்பார்கள், சுயநீதிக்காகச் செய்யும் செயற்பாடுகளை யேசு கண்டித்தார். சுய நீதிக்காகவோ அல்லது புகழுக்காகவோ உபவாசம் செய்யாமல், ஆவிக்குரிய ஒழுக்கத்திற்காகவும், முக்கிய தேவைகளுக்காகவும் உபவாசித்து ஜெபிப்பதை அவர் விரும்பினார்.

உபவாசத்திற்கான வேத வார்த்தைகள்.
உபவாசிப்பதால் ஏற்படும் நன்மைகள் யாவை:-2 நாளா.20:3. :-20: 3 அப்பொழுது யோசபாத் பயந்து, கர்த்தரைத்தேடுகிறதற்கு ஒருமுகப்பட்டு, யூதாவெங்கும் உபவாசத்தைக் கூறுவித்தான்.
உபவாசிப்தனால்  நாம் கர்த்தரிடம் அதிகமாக கிட்டிச்சேருவோம், அதனால் அவருடைய வழிநடத்தலைப்பெற்றுக் கொள்ளுவோம்.
யோவேல்.1:14. பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விஷேசித்த ஆசரிப்பைக்கூறுங்கள், மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும்  உங்கள் தேவனாகிய  கர்த்தரின் ஆலயத்திலே  கூடிவரச்செய்து  கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
உபவாசம் தனித்தும் கூட்டாகவும் மனம்திரும்புவதற்கு உதவுகிறது:-
எஸ்றா:8: 21, 23
அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும், எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருட்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும் , நான் அங்கே அகாவா நதியண்டையில் உபவாசத்தைக்  கூறினேன். அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்தில் அதைத் தேடினோம், எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.
உபவாசம் கர்த்தருடைய பாதுகாப்பைத் தேடுவதற்கு எங்களை ஞாபகப்படுத்துகிறது:-
எஸ்தர்: 4: 16  நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாடள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம் பண்ணுங்கள், நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம், இவ்விதமாய் சட்டத்தைமீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன், நான் செத்தாலும் சாகிறேன் என்றுசொல்லச் சொன்னாள்.

உபவாசம்  எங்களை உற்சாகப்படுத்தும்:- 1.நாளா.10: 12 பராக்கிரமசாலிகள் எல்லாரும் எழுந்துபோய், சவுலின் உடலையும், அவன்குமாரரின் உடலையும் எடுத்து. யாபேசுக்கு கொண்டுவந்து, அவர்கள் எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாரிமரத்தின்கீழ் அடக்கம் பண்ணி, ஏழுநாள் உபவாசம்பண்ணினார்கள்.
உபவாசம் எங்கள் துக்கங்களை மாற்றும்.
உபவாசம் பண்ணுவதற்குரியா  காலம் எது? 2.சாமு. 3:35…..மரணச்சடங்கின் நாளின் போது தாவீது எதையும் உண்ணுவதற்கு மறுத்துவிட்டான்.
கவலையுள்ள நாட்களில் உபவாசிப்பது நல்லது.
எஸ்றா: 10:6….. அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினிமித்தம் அப்பம் புசியாமலும் தண்ணீர்குடியாமலும் துக்கித்துக் கொண்டிருந்தான்.
உபாகமம்.9: 18-19. கர்த்தரைக் கோபப்படுத்துவதற்கு நீங்கள் அவருடைய சமூகத்தில் பொல்லாப்புச்செய்து நடப்பித்த உங்களுடைய சகல பாவங்கள் நிமித்தம், நான் கர்த்தருக்கு முன்பாக முன்போல இரவும் பகலும் நாற்பதுநாள் விழுந்து கிடந்தேன், நான் அப்பம் புசிக்கவுமில்லை  தண்ணீர் குடிக்கவுமில்லை. கர்த்தர் உங்களை அழிக்கும்படி உங்கள்மேல் கொண்டிருந்த கோபத்திற்கும் உக்கிரத்திற்கும் பயந்தேன், கர்த்தர் அந்தமுறையும் என் மன்றாட்டைக் கேட்டார்.
மற்றவர்களுடைய பாவங்களுக்காக வேண்டுதல்செய்யும்போது உபவாசித்தல் சிறப்பானது.
அப்.14: 23….அல்லாமலும் அந்தச்சபைகளில் அவர்களுக்கு மூப்பர்களை ஏற்படுத்தி வைத்து, உபவாசித்து ஜெபம்பண்ணி, அவர்கள் விசுவாசித்துப் பற்றிக் கொண்ட கர்த்தருக்கு அவர்களை ஒப்புவித்தார்கள்.
பிரதிஷ்டையின் நாள்களில் உபவாசித்து ஜெபம்செய்தல் நல்லது
2.சாமு. 12:16. அப்பொழுது தாவீது அந்தப்பிள்ளைக்காக தேவனிடத்தில் பிராத்தனைபண்ணி, உபவாசித்து, உள்ளேபோய், இராமுழுவதும் தரையிலே கிடந்தான்.
பயப்படத் தக்க நோய் ஏற்படும் காலத்தில் உபவாசிப்பது நல்லது.
யோனா: 3:5 அப்பொழுது நினிவேயிலுள்ள ஜனங்கள் தேவனை விசுவாசித்து, உபவாசம்செய்யும்படி  கூறினார்கள்,பெரியோர்முதல் சிறியோர்மட்டும் இரட்டுடுத்திக் கொண்டார்கள்.
மனம்திரும்பும் காலங்களில் உபவாசிப்பது ஏற்றது
உபவாசிப்பதற்கான வழிநடத்தல்கள் யாவை? எப்படி நான் உபவாசிக்க வேண்டும்?
ஏசாயா. 58: 3-7
நான் உபவாசம் பண்ணும்போது நீர் நோக்காமலிருக்கிறதென்ன? நாங்கள் எங்கள்  ஆத்துமாக்களை ஒடுக்கும் போது நீர் அதை அறியாமலிருக்கிநதென்ன என்கிறார்கள், இதோ, நீங்கள் உபவாசிக்கும் நாளிலே உங்கள் இச்சையின்படி நடந்து , உங்கள் வேலைகளையெல்லாம் கட்டாயமாகச் செய்கிறீர்கள்.
இதோ, வழக்குக்கும் வாதுக்கும் துஷ்டத்தனத்தையுடைய கையினால் குத்துகிறதற்கும் உபவாசிக்கிறீர்கள், நீங்கள் உங்கள் கூக்குரலை உயரத்திலே கேட்கப்பண்ணும்படியாய், இந்நாளில் உபவாசிக்கிறதுபோல் உபவாசியாதிருங்கள்.
மனுஷன் தன் ஆத்துமாவை ஒடுக்கிறதும், தலைவணங்கி நாணலைப்போல் இரட்டிலும் சாம்பலிலும் படுத்துக் கொள்கிறதும், எனக்குப் பிரியமான நாளாயிருக்குமோ? இதையா உபவாசமென்றும் கர்த்தருக்குப் பிரியமான நாளென்றும் சொல்லுகிறாய்?

உபவாசம் என்பது ஒரு சமயச்சடங்கிற்கான செயற்பாடல்ல,ஆனால் கர்த்தருக்கு முன்பாக நம்மை தாழ்த்தி ஒடுக்குதலாகும். நாங்கள் என்னசெய்கிறோம் என்பதல்ல, ஏன் இதைச் செய்கிறோம் என்பதுதான் மிக முக்கியமானதாகும்.
மத். 6: 16-18.
நீங்கள் உபவாசிக்கும்போது, மாயக்கார்ரைப் போல முகவாடலாய் இராதேயுங்கள், அவர்கள்உபவாசிக்கிறதை மனுஷர்  காணும் பொருட்டாக, தங்கள் முகங்களை வாடப்பண்ணுகிறார்கள், அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்த்த்தென்று ,மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
நீயோஉபவாசிக்கும் போது , அந்த உபவாசம் மணுஷருக்குக்  காணப்படாமல், அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவுக்கே  காணும்படியாக, உன் தலைக்கு  எண்ணெய்பூசி, உன் முகத்தைக கழுவு.
அப்பொழது அந்தரங்கத்தில் பார்க்கிற உன்பிதா, உனக்கு வெளியரங்கமாய்ப் பதிலளிப்பார்.
ஜெபத்தைப்போல, உபவாசமும்பொது இடங்களில்செய்யப்படும் செயற்பாடல்ல, ஆனால் கர்த்தரோடு ஏற்படுத்தப்படும் அந்தரங்கச் செயற்பாடாகும்.
தானியேல்:-9: 3 நான் உபவாசம்பண்ணி இரட்டிலும் சாம்பலிலும் உட்கார்ந்து,தேவனாகிய ஆண்டவரை ஜெபத்தினாலும் விண்ணப்பங்களினாலும் தேட என் முகத்தை அவருக்குநோக்கி
உபவாசமும் ஜெபமும் ஆவிக்குரிய  பாடல்களாகும்
அப் 13: 2-3 அவர்கள் கர்த்தருக்கு ஆராதனைசெய்து, உபவாசித்துக்கொண்டிருக்கிறபோது, பர்ணபாவையும் சவுலையும் நான் அழைத்த ஊழியத்துக்காக அவர்களைப் பிரித்துவிடுங்கள் என்று பரிசுத்த ஆவியானவர் திருவுளம்பற்றினார், அப்பொழுது உபவாசித்துஜெபம்பண்ணி, அவர்கள்மேல்கைகளைவைத்து, அவர்களை அனுப்பினார்கள்.

திங்கள், 6 டிசம்பர், 2010

கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு- ஜார்ஜ் முல்லர்

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள். - 1 பேதுரு 5:7.

விசுவாசத்திற்கு நல்ல ஒரு எடுத்துக்காட்டாக விளங்கியவர் ஜார்ஜ் முல்லர் George Mueller (1805-1898)  என்னும் அருமையான தேவ ஊழியர். அவர் கர்த்தருக்காக தன் வாழ்நாளில் பெரிய காரியங்களை செய்ததுமல்லாமல், விசுவாசத்தில் எப்படி எல்லாம் சாதிக்கலாம் என்பதை நடைமுறையில் செய்துக் காட்டியவர். அவர் அநேக அனாதை இல்லங்களை வைத்து நடத்தியவர்.  மாத சம்பளம் ஒன்றும் பெறாமல் கர்த்தர் மேல் விசுவாசத்தின் மூலமே அவைகளை நடத்திக் காட்டியவர். அவர் ஒருமுறை தன் அனாதை இல்லத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை கீழ்க்கண்டவாறு கூறினார்:
ஒரு நாள் காலை உணவிற்கு நேரம் வந்தபோது இங்கிலாந்தில் உள்ள எனது அனாதை இல்லத்தில்
உணவு ஏதும் இல்லை. ஏதாவது வாங்க வேண்டு-மென்றாலும் கையில் பணமும் இல்லை. என்னைக்
காண என் நண்பனின் மகள் வந்திருந்தாள். அவளை சாப்பிடும் அறைக்குக் கூட்டிச் சென்று,  'எங்கள் தகப்பன் செய்யப் போகும் காரியத்தைப் பார்' என்றுக் கூறி, அவளை அந்த இடத்தில் அமரச் செய்தேன். அங்கு எல்லா தட்டுகளும் எல்லா டம்ளர்களும் காலியாக இருந்தன. எல்லாரையும் அமரச் செய்து, எங்கள் தலைளை தாழ்த்தி, 'எங்கள் நல்ல தகப்பனே, நீர் எங்களுக்கு கொடு;க்க இருக்கும் உணவிற்காக நன்றி'  என்றுச் சொல்லி ஜெபித்தோம்.
ஆமென் என்றுச் சொல்லி முடிப்பதற்குள் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. அங்கு ரொட்டிகளைச்
செய்பவர் நின்றிருந்தார். அவர், 'எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை, உங்களுக்கு சாப்பிட காலையில் ஒன்றுமில்லை என்று எனக்கு தோன்றிற்று. ஆகவே காலை 2 மணிக்கு எழுந்து உங்களுக்கென்று புதியதாக இந்த ரொட்டிகளைச் செய்தேன்' என்று தேவையான ரொட்டிகளை அவரிடம் கொடுத்தார். அது முடிந்த உடனே மற்றொரு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. திறந்தால் பால் கொடுப்பவர், அவருடைய வண்டி இந்த அனாதை இல்லத்தின் முன்பாக உடைந்துப் போய் விட்டது. அதை சரிசெய்ய வேண்டுமென்றால், அதிலிருந்து எல்லா பாலையும் வெளியேற்றவேண்டும். ஆகவே இந்தப் பாலை வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்டாராம். 'அன்று அருமையான காலை உணவு எங்களுக்கு கிடைத்தது'  என்று முல்லர் கூறினாராம்.
உங்கள் தேவைகளைக் குறித்துக் கலங்கிக் கொண்டிருக்கிறீர்களா?  அவர் உங்களை
விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளை யெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள் என்று வசனம் கூறுகிறது. அன்று கேரீத் ஆற்றங்கரையில் எலியா தீர்க்கதரிசிக்கு காகங்களைக் கொண்டு காலையும் மாலையும் போஷித்து  (1 இராஜாக்கள் 17:6-7) வழி நடத்தின தேவன், இன்றும் உங்கள் தேவைகளை சந்திக்க மாறாதவராயிருக்கிறார். 
நீ விசுவாசித்தால் தேவனின் மகிமையைக் காண்பாய் என்று இயேசுகிறிஸ்து கூறினதுப் போல நாம்
விசுவாசித்தால் தேவன் நம் வாழ்க்கையிலும் அற்புதங்களைச் செய்ய வல்லராயிருக்கிறார். ஒரு
முல்லருடைய வாழ்வில் அற்புதங்களைச் செய்ய தேவன் வல்லமையுள்ளவராயிருக்கும்போது நம் வாழ்விலும் அவர் செய்ய வல்லவராகவேயிருக்கிறார். அவர் படசபாதமுள்ள தேவன் அல்ல. ஆனால் நாம் விசுவாசிக்க வேண்டும். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்று வேதம் கூறுகிறது. நம்மை விசாரிக்கிற தேவன் ஒருவர் நமக்கு இருக்கும்போது நாம் ஏன் கலங்க வேண்டும்? அவர் நம் தேவைகளை சந்திக்கிற யெகோவாயீரே! கடன்தொல்லையா? பணத்தேவையா? வேலையில்லாத
பிரச்சனையா? கலங்காதிருங்கள்! விசுவாசத்தோடு தேவனிடம் கேளுங்கள். தேவன் உங்கள் தேவைகளை சந்திக்க போதுமானவராயிருக்கிறார். வானமும் பூமியும் அவருடையது. அவருடைய பிள்ளளைகளாகிய நமக்கு செய்யாமல் வேறு யாருக்குச் செய்யப் போகிறார். பெரிய தேவனிடமிருந்து பெரிய காரியங்களை எதிர்பாருங்கள். பெரிய காரியங்களைச் செய்ய நம்தேவன் சர்வவல்லமையுள்ள தேவனாயிருக்கிறார்.
      கர்த்தர் மேல் பாரத்தை வைத்துவிடு
      கலங்கி தவிக்காதே
      அவரே உன்னை ஆதரிப்பார்
      அதிசயம் செய்வார்
      நீதிமான் தள்ளாட விடமாட்டார்
      நித்தமும் தாங்கி நடத்திடுவார்

ஜெபம்:
எங்கள் நல்ல தகப்பனே, இந்த அருமையான காலை வேளைக்காக உம்மை நன்றியோடு துதிக்கிறோம். விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும் என்றுச் சொன்னீரே, எங்கள் விசுவாசத்தை வர்த்திக்கப் பண்ணும் தகப்பனே. எங்கள் தேவைகளை சந்திக்க வல்ல எங்கள் தேவனுக்கு முனபாக எங்கள் தேவைகளை வைக்கிறோம் தகப்பனே, வேறு யாரிடம் நாங்கள் செல்ல முடியும் ஐயா?
நீரே எங்கள் யெகோவாயீரே, தயவாய் எங்கள் தேவைகளை சந்தியும் தகப்பனே. விசுவாசத்தோடு நீர்
எங்கள் தேவைகளை சந்தித்துவிட்டீர் என்று உம்மைத் துதிக்கிறோம். நீர் அப்படியே செய்வதற்காக நன்றி. எங்கள் ஜெபத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி.  இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

மனுசர் அவருக்குள் ஆசிர்வதிக்கப்படுவார்கள்

சங்கீதம் 72 :17 மனுசர் அவருக்குள் ஆசிர்வதிக்கப்படுவார்கள்
மூன்று விதமான ஆசிர்வாதங்கள் 


  1. வானத்துக்குரிய ஆசீர்வாதம் 
  2. ஆழத்துக்குரிய ஆசீர்வாதம்
  3. பதவிக்குரிய ஆசிர்வாதம் .
ஆதியாகமம் 49 : 28 
யோசேப்புக்கு  யாக்கோபு ஆசீர்வதித்தான்.


தமது சாயலில் இருக்கும் போது ஆசிர்வதித்தார்.
தேவ சாயலில் மனுஷன் மாறும் போதும், வேதனையோடு ஆசீர்வதிக்கபடுவான்.
தேவசாயலைக்காத்துக் கொளளும் போது கர்த்தரின் அசிர்வாதாம் ஜசுவரியத்தைத் தரும்.
இந்த ஆசிர்வாதங்களை எப்படி பெற்றுக்கொள்வது ?
1 .ஆபிரகாம்(ஆதி 24:35)
 பயந்தான்  (ஆதி 22 :11 ,12)
 கிழ்படிந்தான் (ஆதி 22 ;15 -17)
2 .ஈசாக்கு(ஆதி 27 : 4)
ஈசாக்கு ஆசிர்வதித்த ஆசிர்வாதங்கள் .
3 .மோசே(யாத் 39 :42 -43)
 கர்த்தர் மோசேக்கு கிற்பித்தபடி செய்தார்.
மோசே ஜனங்களை  ஆசீர்வதித்தான்.
  • நம் பெற்றோருக்கு கொடுத்து ஆசிர்வாதத்தை பெற்று கொள்ள வேண்டும்.

You may like also

Categories

Popular